மாநகர முதல்வருக்கும் – வடமாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட சந்திப்பு

IMG 92f2cc7f8deef778c961b9c6477854eb V
IMG 92f2cc7f8deef778c961b9c6477854eb V

வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்று (8) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின் போது ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கு, மாநகர முதல்வர் மக்கள் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதன் போது மாநகரசபையின் செயற்றிட்டங்கள், அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்திருக்கின்ற செயற்றிட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முதல்வர் விளக்கினார்.

குறித்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது முதல்வர் மாநகரசபை சார்பில் நினைவுச் சின்னம் ஒன்றையும் ஆளுநருக்கு வழங்கிருந்தார்.