தேசிய அரச நாடக விழா – கிளிநொச்சி மண்குளித்து நாடகம் தெரிவு!

drama
drama

தேசிய அரச நாடக விழாப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை 3 தசாப்த காலப்பகுதியின் பின் கிளிநொச்சி மண்குளித்து நாடகம் பெற்றுள்ளது.

இதற்கான முதல் சுற்றுப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு, இரண்டாம் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை (11) மாலை 2.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த நாடகம் பிரதேச சபையின் பண்பாட்டுப் பெருவிழாவில் பெருவெளியில் நிகழ்த்தப்பட்டதுடன், தற்போது படச்சட்ட மேடைக்காக தயாரிக்கப்பட்டு அதன் ஒத்திகைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நாடகம் அருணாசலம் சத்தியானந்தம், சிவராசா பிரதீப் ஆகியோரின் நெறியாள்கையிலும், விஷ்ணு ஆனந்தின் இணை நெறியாள்கையிலும், செயல்வீரனின் இசையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடகத்தினை அனைவரும் கண்டுகளித்து கலைஞர்களை ஊக்குவிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.