இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய படகுகளையும் மீனவர்களையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
இந்தியா சென்றுள்ள வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிற்கிடையிலான சந்திப்பு நேற்று (9) புதுடில்லியில் இடம்பெற்றது.
இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய பயணத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கையை மீண்டும் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் விடுக்கப்பட்டிருந்து.
அதற்கமைய இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சா் விரைவில் இந்திய மீனவா்கள் விடுவிக்கப்படுவார்கள் அத்துடன் அவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பகுகளும் திருப்பித்தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.