வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு!

20200110 135943
20200110 135943

வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் காரணமாக 826 நோயாளர்கள் இனங்கானப்பட்ட நிலையில் வவுனியா நகர் முழுவதும் டெங்கு ஒழிப்பு விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா நகர சபைக்குட்பட்ட இரண்டாம் குருக்குத்தெரு , புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, ஏ9 வீதி போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து காணப்படுகிறது.

அதனை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த பகுதிகளில் மலேரிய தடுப்பு பிரிவினரால் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை இன்று (10) காலை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது வவுனியாவில் டெங்கு நுளம்பின் தாக்கம் ஆரம்பத்தினை விட தற்போது குறைந்துள்ளதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தியாகலிங்கம் தெரிவித்தார்.