2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் இம்மாத இறுதியில் கையொப்பம் இடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி வாக்காளர் பெயர் பட்டியலில் கையொப்பம் இடப்படவுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமையவே நடத்தப்படவுள்ளன.
அத்துடன் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உரிய முறையில் கண்காய்வு அறிக்கையை சமர்பிக்காத சில அரசியல் கட்சிகளின் பதிவை இரத்து செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.