பராமரிப்பற்ற நிலையில் கிளிநொச்சி பொதுச் சந்தை மலசலகூடம் – மக்கள் அசௌகரியம்

IMG 3754
IMG 3754

கிளிநொச்சி பொதுச்சந்தை கட்டட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடம் தற்போது பாவனைக்குட்படுத்த முடியாத வகையில் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில் சந்தையின் தென்மேற்கு பகுதியில் குளியலறையுடன் கூடிய புதிய மலசலகூட தொகுதி அமைக்கப்பட்டு விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது பாவனையில் உள்ள மலசலகூட தொகுதியானது மிகவும் மோசமாக காணப்படுகின்ற நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூட தொகுதியும் இதே நிலைமையில்தான் காணப்படும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மக்களது வரிப்பணத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த மலசலகூட தொகுதியானது இவ்வாறு பராமரிப்பற்று காணப்படுவது மன வேதனைக்குறியது.

எனவே இது தொடர்பில் களிநொச்சி, கரைச்சி பிரதேச சபையானது இது தாடர்பில் கவனம் செலுத்தி உரிய முறையில் பராமரிப்பினை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.