மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மத்தளை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குறித்த பகுதிகளை இணைக்கும் வகையிலான விமான சேவையினை முன்னெடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் இதற்காக முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் எரிபொருள் சலுகைகள் என்பன வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.