இந்நிலையில் இந்திய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இலங்கை பிரதமரை நேரில் சந்தித்து “இலங்கையில் அவசர காலச்சட்டம் நீக்கப்பட்டது போல முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 250இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
குறித்த தாக்குதல் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்டிருந்தாலும் முஸ்லிம் சமூகத்தை சந்தேகக்கண் கொண்டு நோக்கும் நிலைமை உருவானது. இதனால் முஸ்லிம் சமூகம் முற்றாக மனமுடைந்து பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் என இந்திய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.