புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வேண்டும் – மடுல்சீமை வீதியில் மக்கள் போராட்டம்

1 58
1 58

பதுளை- பசறை- மடுல்சீமை வீதியை மறித்து மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று (13) அதிகாலை தொடக்கம் அந்த வீதியை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அந்த வீதியில் சேவையிலீடுபடும் பழைய இ.போ.ச பேருந்துகளை அகற்றிவிட்டு, புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

குறித்த வீதியில் கடந்த வாரம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன், 50 பேர் வரை காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.