புதையல் தோண்டிய ஐவர் கைது

114729 jwil
114729 jwil

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய குற்றச்சாட்டுக்காக ஹொரண, மாலொஸ்எல பகுதியில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும், பூஜைக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஹொரண மற்றும் மீட்டியாகொட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களை ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.