பெற்றோரை இழந்த 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மர்ஹும் பழில் மெளலானா பவுண்டேஷன் அமைப்பின் தவிசாளர் அன்ஸார் மெளலானா தலைமையில் இடம்பெற்றது.
பிள்ளைகளுக்கு நாம் வழங்கும் செல்வம் கல்வியேயாகும் எனும் கருப்பொருளில் நேற்று (12) மருதமுனை மக்பூலியா புரத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள்,விரிவுரையாளர்கள்,அதிபர், சமூக உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .