இலங்கையின் 10 மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களுக்கு ஒரே நேரத்தில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு புதிதாக நியமிக்கப்படவுள்ள 10 மாவட்டச் செயலாளர்களில் வடக்கு கிழக்குப் பகுதியில் மட்டும் 4 மாவட்டச் செயலாளர்களும் மொனராகலை , புத்தளம் , அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டத்துடன் கொழும்பு மாவட்டமும் உள்ளடக்கப்படுகின்றது.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு றூபவதி கேதீஸ்வரனும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமலேந்திரன் , வவுனியா மாவட்டத்திற்கு அலங்க மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கலாவதியும் நியமிக்கபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.