இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் – யாழில் பதற்ற நிலை!

jaffna0 1
jaffna0 1

யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பிலான சுற்றிவளைப்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியை இராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் (15) நள்ளிரவு குறித்த பகுதியில் இராணுவ வாகனத்திற்கு பாதை விடவில்லை என கூறி இளைஞர்கள் சிலருடன் இராணுவம் முரண்பட்டுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் இடம்பெற்றுள்ளது.

இம்மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் உடனடியாக சம்பவ இடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நேற்று நள்ளிரவு தொடக்கம் குறித்த பகுதியை இராணுவம் முற்றுகையிட்டு தொடர் சோதனை நடாத்திவருவதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள்- இராணுவம் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாகவும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு இன்று காலை (16) சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.