அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிக்கச் செய்யும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை கண்டுபிடிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் சகல பேருந்துகளையும் பரிசீலிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாராகியுள்ளது.
இவ்வாறு அதிக ஒலி எழுப்பும் வகையில் பாடல்களை ஒலிக்கச் செய்யும் பேருந்துகள் தொடர்பில் முறையிடுவதற்கு 1955 என்ற அவசர அழைப்பிலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.