வாகன விபத்தில் ஒருவர் பலி !

Accident 1 1
Accident 1 1

புத்தளம் – திருகோணமலை வீதி கஹடகஸ்கதிகிலிய – ரன்பன்வில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு(16) புத்தளம் தொடக்கம் அனுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த உந்துருளி ஜீப் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்து உந்துருளியாளர் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் கஹடகஸ்கலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது 35 வயதுடைய உந்துருளியாளர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்த மனைவி மற்றும் மகள் மேலதிக சிகிச்சைக்காக அனுராரபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.