பதவி நீக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்!

0 fr
0 fr

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலரை அப்பதவிகளில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான யூ.பிலிப், இரா.அசோக் மற்றும் மண்முனைப் பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான தோ.சுரேந்தர், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான சி.சிவாநந்தன் ஆகியோரே இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளனர்.