இலங்கையின் புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக நில அளவையாளர் திணைக்களத்தின் தலைமை அதிகாரி எஸ்.எச்.பீ.பீ.சங்கக்கார தெரிவித்துள்ளார்.
6 மாத காலத்துக்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய வீதி வரைபடத்தில் அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான தகவல்கள், புதிதாக நிருமாணிக்கப்பட்ட வீதிகள் தொடர்பான தகவல்கள், வைத்தியசாலை, பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைவாக புதிய வீதி வரைபடம் வெளியிடப்படுவதன் மூலம் நாட்டுக்கு சுற்றுலாப்பயணத்துக்காக வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.