மூவின மக்களும் இணைந்து தமிழில் தேசிய கீதம் இசைப்பு!

national antham
national antham

சிங்களம் மட்டும் தேசியகீதம் என்ற அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள சிங்கள, முஸ்லிம், தமிழ் இளையவர்கள், கலைஞர்கள் இணைந்து தமிழில் தேசிய கீதம் இசைத்துள்ளனர்.

எதிர்வரும் சுதந்திரதின நிகழ்வில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என பொதுநிருவாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் உருவாகியதனை அடுத்து பிரதமர் மஹிந் ராஜபக்சவும், அப்படியொரு முடிவெடுக்கவில்லை என்றும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும் என தெரிவித்தார்.

அத்துடன் எவ்வாறான இடத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்படும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் மூவின மக்களும் இணைந்து தமிழில் தேசிய கீதம் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.