முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை அகதி ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கு தகவல் வழங்கியதாக இலங்கை அகதி ஜ.நவநீதன் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நபரிற்கு ஆறு ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து ஜேர்மன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.