மத்தள சர்வதேச விமான நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்காக பிரதமரின் உத்தரவின் பெயரில் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
விமான நிலைய மற்றும் விமான சேவையின் துணைத் தலைவர் ரஜீவசிறி சூரியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ம் திகதி விமானம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் பிரதிநிதிகளுடன் சிறப்புக் கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது.
அத்துடன் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த விமான நிறுவனங்களை ஊக்குவிக்க பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.