யாழ்.மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் காயங்களுடன் சடலம் ஒன்று இன்று காலை (22) மீட்கப்பட்டுள்ளது.
வீதியில் கைவிடப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு கூறியுள்ளனா்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.