இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

paralumanram
paralumanram

நாடாளுமன்ற அமர்வுகள் இன்றைய தினமும் (23) இடம்பெறவுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய தடயவியல் கணக்கறிக்கை, இறுவெட்டுக்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றை இன்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.