சட்டத்துறை பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரல்!

bandu0
bandu0

இடைநிறுத்தப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட விரிவுரையாளர்களுடன் நேற்று (23) இதுதொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்த்தன பேச்சு நடத்தினார்.

மென்பொருள் கட்டமைப்பை அறிமுகப்படுத்தி, பல்கலைக்கழக வாய்ப்பைப் பெறாத 40 ஆயிரம் மாணவர்களை சேர்த்துக் கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.