யாழில் பேருந்திற்காக காத்திருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி அபகரிப்பு

chain
chain

பருத்தித்துறை வீதியில் உள்ள கல்வியங்காடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் தங்க சங்கலி கொள்ளையர்கள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

நேற்று (27) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்வியங்காடு பகுதியில் இலங்கநாயகி அம்மன் ஆலயம் முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் சங்கிலியை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.