இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 7ம் நாள் இந்தியாவிற்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 7ம் நாள் இந்தியா செல்லும் பிரதமர், 8ம் நாள் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து அதன் பின்னர் 11ம் நாள் வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது வாரணாசி, சர்னத், புத்தகயா, மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கும் பிரதமர் செல்லவுள்ளார்.
இத்தகவலை இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை பிரதமராக பதவியேற்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷ முதன் முறையாக இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.