வவுனியாவில் விபத்து – பேருந்து நடத்துனர் படுகாயம்

DSC08516
DSC08516

வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்று(06) காலை இடம்பெற்ற விபத்தில் பேருந்து நடத்துனர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

முல்லைதீவில் இருந்து வவுனியா நோக்கிசென்ற தனியார் பேருந்து நெடுங்கேணி நொச்சியடி ஜயனார் ஆலயத்தில் வழிபாட்டிற்காக நிறுத்தப்பட்டது.

இதன்போது பேருந்து நடத்துனர் ஆலயத்தின் உண்டியலில் பணத்தினை இடுவதற்காக வீதியை கடந்து சென்றபோது திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த மகிழூர்ந்து ஒன்று அவரை மோதியுள்ளது.

விபத்தில் பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக நெடுங்கேணி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.