முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு – ஒருவர் படுகாயம்

IMG 1124
IMG 1124

முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் சற்று முன்னர் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த வெடிப்பு சம்பவம் இன்று (08) இடம்பெற்றுள்ள நிலையில் படுகாயமடைந்தவர் ஒரு காலை முற்றாக இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இரும்பு வியாபாரம் செய்யும் சூசைப்பிள்ளை புலேந்திரன் (வயது-42) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இரும்பு வியாபாரம் செய்பவர் எனவும் இதற்காக சேகரிக்கப்பட்ட பொருட்களை அவர் பிரித்தெடுக்க முயற்சித்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இராணுவத்தினர்,விசேட அதிரடிப் படையினர் அனைவரும் வருகை தந்து குறித்த இடத்தை சோதனையிட்டு வருகின்றனர்.