வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் விசமிகள் சிலரால் இன்று(10) திருடிச்செல்லப்பட்டுள்ளது.
வவுனியா சாந்தசோலை உப வீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் இச்செயற்பாடானது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு வழங்க உள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.