இரண்டு மாதத்திற்குள் 8 ஆயிரத்து 162 பேர் கைது! வடக்கில் அதிகம்

download
download

கடந்த இரண்டு மாதத்தில் 8 ஆயிரத்து 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதக் காலப்பகுதியில் காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் முன்னெடுத்த 8 ஆயிரத்து 227 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் போதை பொருள் விற்பனையுடன் தொடர்புடைய 8 ஆயிரத்து 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாபபு அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரத்து 127 கிலோகிராம் கேரளா கஞ்சா போதை பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக வடக்கில் அதிகளவான கஞ்சா கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.