வடக்கு கிழக்கில் 20 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி

voters
voters

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 20,30038 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டின் வாக்காளர் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்படி பெரும் எண்ணிக்கையானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வட மாகாணத்தில் 8,46,833 பேரும், கிழக்கு மாகாணத்தில் 11,83,205 பேரும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்.

2017ம் ஆண்டை விட வட மாகாணத்தில் 17,916 பேரும், கிழக்கு மாகாணத்தில் 27,059 பேரும் 2018ம் ஆண்டின் வாக்காளர் கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.