கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

IMG 20200303 131529
IMG 20200303 131529


வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து இன்று (03) குடும்ப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான காண்டீபன் கோமதி (வயது-59) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த உறவினர்கள், வழமைபோன்று நித்திரைக்கு சென்றவரை காலையில் காணவில்லை என தேடிய போது கிணற்றினுள் சடலமாக காணப்பட்டதாக தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை “தனது சாவுக்கு பிள்ளைகள் காரணமில்லை. எனது உடலை கீறவோ வெட்டவோ வேண்டாம்” என்றும் குறித்த தாயால் எழுதப்பட்டதாக நம்பப்படும் கடிதம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.