இலங்கையில் நாளைய தினம்(04/03/2020) நான்கு மாகாணங்கள் மற்றும் இரண்டு மாவட்டங்களுக்கு அதி உயர் வெப்பநிலை காணப்படும் என ,வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வடமத்திய மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலுமே இவ்வாறு அதி உயர் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கு போதிய குடிநீர் வழங்கப்பட வேண்டுமென குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
வயதானவர்கள் குழந்தைகள் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.