முன்னாள் ஜனாதிபதி செய்த மிகப் பெரிய கெட்ட வேலை!

5 hg
5 hg

மகிந்த ,கோட்டாபய சார்பில் குரல் கொடுக்கும், மகிந்தவை கைவிட்டு செல்லாத வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் மைத்திரியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நான் கூறிய மூன்று விடயங்கள் நிறைவேறியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற ஏதோ ஒன்றை உருவாக்கும் போது தாமரை மொட்டுச் சின்னத்திலேயே நாங்கள் போட்டியிடுவோம் என்று கூறினேன்.

மைத்திரிபால சிறிசேன கூட்டணியின் இணை தலைவர் பதவியை கோரிய போது எங்களுக்கு இணை தலைவர்கள் இல்லை என்று சொன்னேன்.

எங்களுக்கு இருக்கும் ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச. அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலில் கூட்டணியில் அல்ல.

பொதுஜன பெரமுன ஊடாக போட்டியிடுவோம் என்று நாங்கள் தெரிவித்தோம். நான் கூறிய அனைத்து விடயங்களும் தற்போது நடந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார் .