மட்டக்ளப்பில் நான்கு தமிழரை நாடாளுமன்றம் அனுப்புங்கள் – இரா.துரைரெட்ணம்

1 ad 1
1 ad 1

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் இரு தடவைகள் நாடாளுமன்றத் தேர்தலில் 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

பல தடவைகள் தேர்தல்களில் நாம் விகிதாசாரத்துக்கு ஏற்றவாறு தமிழ் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டத்துக்கான 5 வேட்பாளர்களில் 4 தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

இனவாத அரசின் கைக்கூலிகள் வாக்குகளைப் பிரிப்பதற்காகத் தேர்தலில் வேட்பாளர்களாக இறங்கித் தமிழ் வாக்குகளைப் பிரிப்பதாலேயே தமிழர்களுடைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைகின்றது.

தமிழர்களாகிய நாங்கள் 4 நாடாளுமன்ற தமிழ்பிரதிநிதிகளைப் பெறவேண்டுமாயின் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இந்தத் தேர்தலிலும் விட்டுவிடக் கூடாது. முதலில் ஒற்றுமையாகத் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.