அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் பலி

1 3ges
1 3ges

தென்னிலங்கையில் லுனுகம்வெஹேர பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த வாகனம் மரத்துடன் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்றே விபத்திற்கு உள்ளாகியுள்ளதென தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.