கொடூரமான பகிடிவதை – உயிருக்கு போராடும் மாணவன்

1 1
1 1

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதல் வருடத்தில் கற்கும் மாணவன் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக அவர் விபத்துக்குள்ளாகி உள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் சிலர் கனரக வாகனத்தின் டயரை தலையில் உருட்டியமையினால் அது தலையில் விழுந்துள்ளது . இதனால் தலையில் பலத்த அடி ஏற்பட்டு அவர் உயிருக்கு போராடுவதாக பாதிக்கப்பட்ட மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.