வெளிநாட்டுக்கு போகவேண்டாம் – காரணம் என்ன ?

9 ped
9 ped

கொரோனா வைரஸ் பரவும் நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ,வௌிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் மற்றும் வௌிநாடுகளுக்கு செல்லவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அந்தந்த நாடுகளின் அதிகாரிகள் வழங்கும் தகவல்களுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.