செம்மணி பகுதியில் வைத்து ஆசிரியையின் தாலிக்கொடி ,சங்கிலி என்பவற்றை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் நாவற்குழி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்து வருகின்றார்.
நேற்றைய தினம் இந்த வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது .
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.