கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார்கள் எனச் சந்தேகிக்கப்படும் போலந்து நாட்டுப் பிரஜைகள் 4 பேர் கொழும்பு, அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுக்குச் செல்வதற்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த குறித்த 4 பேரிடமும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன என்று விமான நிலையத்தின் சுகாதார மருத்துவப் பிரிவினர் குறிப்பிட்டனர்.
இதன் காரணமாக நான்கு போலந்துப் பிரஜைகளும் அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த போலந்துப் பிரஜைகள்இலங்கையில் தங்கியிருந்த இடங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.