தனியார் துறையினருக்கும் நாளை விடுமுறை

7 uu
7 uu

கொரோனா வைரஸ் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை கருத்திற்கொண்டு தனியார் துறையினருக்கும் நாளை அரச விடுமுறை தினமாக அமுல்ப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இலங்கையையிலும் கோரத்தாண்டவமாடுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டின் சகல பயிற்சி பட்டறைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்களை ஒன்றிணைத்து இந்த வைரஸ் தாக்கத்தினை நாட்டில் இல்லாது ஒழிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, அங்கு தங்கியிருந்து பயிற்சி பெறும் அனைவரையும் தங்களது இல்லங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.