கொரோனா தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா – முக்கிய கலந்துரையாடல்

1 ee
1 ee

கொரோனா வைரஸ் என அழைக்கப்படும் கொவிட் 19 தொற்றின் பாதிப்பு காரணமாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் காரியாலயத்தில் நாளை இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கொவிட் 19 தொற்று எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.