சீன பிரஜைகளுக்கு தற்காலிக பயணத்தடை

3 er
3 er

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் சீன பிரஜைகளுக்கு தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸை தடுப்பதற்கு விமான நிலையத்தில் தீவிர சோதனை நடவடிக்கை முன்னெடுப்பதைப் போன்று சீனப்பிரஜைகளுக்கும் தற்காலிக தடை விதிக்க வேண்டும்.

அப்போதுதான் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியும். மேலும் கொரோனா வைரஸினால் சீனாவில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் சீனப்பிரஜைகள் எவ்வித தடங்களுமின்றி நாட்டிற்கு வந்து செல்கின்றனர். ஆனால் ஏனைய நாடுகள் இதற்கு தடை விதித்துள்ளன. இதனால் இலங்கையிலும் சீன பிரஜைகளுக்கு தற்காலிக பயணத்தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.