தென் கொரியாவில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் தங்கள் வீடு நோக்கி சென்றிருந்த நால்வர் தன்னார்வமாக தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
அவர்கள் நேற்று இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த முதலாம் திகதி முதல் 9ஆம் திகதி வரை இலங்கை வந்தவர்கள் இதுவரையில் தனிமைப்படுத்திக் கொள்ளாதர்கள் தன்னார்வமாக முன்வருமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
அவ்வாறு நாட்டிற்கு திரும்பிய நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் 117 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.