தேர்தலை பிற்போடுங்கள் – சம்பந்தன் வலியுறுத்து

1 asd
1 asd

கொரோனா வைரஸ் நோயால் உலகமும் பேராபத்தைச் சந்தித்துள்ளது. மக்கள் தங்கள் உயிர்களைக் கையில் பிடித்தவாறு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல. எனவே, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டுள்ள பொதுத்தேர்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பிற்போட வேண்டும்.

இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

நாட்டின் இன்றைய நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது வலியுறுத்தியுள்ளார்.