தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு போஸ்டர்

3 dd
3 dd

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்காக சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு போஸ்டர் ஒன்றை ஒட்டுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்வது அவர்களை சமூகத்தில் ஒதுக்குவதற்கோ அல்லது தனிமைப்படுத்துவதற்கோ அல்ல வைரஸ் வெளியேறுவதனை தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரையில் 2258 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.