அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதயில் கொரோனா தொற்று இடம்பெறுவதை தடுக்கும் முகமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வொன்றினை கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்று முற்பகல் முதல் கல்முனை தமிழ் இளைஞர் சேனை அணியினர் மக்கள் அதிகம் வாழும் கல்முனை குருந்தையடி தொடர் மாடித்தொகுதி அதனை அண்டிய மக்கள் குடியிருப்புகளுக்கு சென்று நோய் பாதுகாப்பு கவசங்கள் சவர்காரம் போன்றவற்றை வழங்கி மக்களுக்கு நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்தியம்பி வருகின்றனர்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையினை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் ஆரம்பித்து வைத்தார்.