யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி

11 4
11 4

உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது நோயாளி வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார் .


இவர் யாழ் போதனா மருத்துவமனையின் கொரோனா விசேட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது .

யாழ்ப்பாணம் அரியாலையில் தேவாலய ஆராதனையில் ஈடுபட்ட சுவிஸ் போதகரிற்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருந்தததையடுத்து அவருடன் பழகியவர்களுக்கும் கொரோனொ தொற்று இருக்கலாமென்று சந்தேகம் வெளியிடப்பட்டிருந்ததது.

இதனையடுத்த அவருடன் தொடர்பை பேணிய இரண்டு பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் இருவரில் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டள்ளது.

இந்த கொரோனா தொற்று நோயாளி இன்னும் சற்று நேரத்தில் கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளார் .

இந்த தகவலை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன .