கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தாவடியை சேர்ந்த சைவ சமயத்தவர்!!

3 ee
3 ee

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சைவ சமயத்தை சேர்ந்தவர் என்றும், அவர் மத போதகர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் குறித்த நபர் சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் கட்டட நிர்மாணம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.