ராஜபக்ஸ அரசாங்கத்தைப் புகழும் வியாழேந்திரன் !

download 9
download 9

கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை ராஜபக்ஸ அரசாங்கம் சிறப்பான முறையில் முன்னெடுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியின் போது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமாயின், குறிப்பிட்ட காலத்திற்குள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பார்கள் எனவும் அவர் சாடியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட வியாழேந்திரன், உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் அனைத்து துறைகளும் முக்கிய பங்காற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.