கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்வடைந்துள்ளது.
ஏற்கெனவே 156 பேர் இந்த தொற்றால் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 24 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அத்துடன், இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று மரணித்த இரத்மலானை பகுதியை சேர்ந்த 58 வயதுடையவரின் இறுதிகிரியைகள் இன்று இடம்பெற்றன.
கொட்கொவத்தை பொது மயானத்தில் அவரது இறுதி கிரியைகள் முன்னெடுக்கப்பட்டன.
அவரின் நெருங்கிய உறவினர்கள் சிலருக்கு மாத்திரம் உடலை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மனைவிக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ள நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் தற்போது அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.